மேற்கு வங்க கிரிக்கெட் கேப்டனுக்கு கொரோனா !

மேற்கு வங்க கிரிக்கெட் கேப்டனுக்கு கொரோனா !
மேற்கு வங்க கிரிக்கெட் கேப்டனுக்கு கொரோனா !

மேற்கு வங்கம் கிரிக்கெட் அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அபிமன்யூ ஈஸ்வரன் அடுத்த 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் பெங்கால் டி20 சேலஞ்ச் தொடர் நவம்பர் 24-ஆம் தேதி தொடங்குகிறது. இப்போது அபிமன்யூ ஈஸ்வரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகமாகி இருக்கிறது.

இதுகுறித்து மேற்குவங்க கிரிக்கெட் சங்கத்தின் இணைச் செயலர் தேபபிரதா தாஸ் வெளியிட்ட அறிக்கையில் "அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. எனினும், அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. அவர் இப்போது தனிமையில் உள்ளார். மேலும் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க மருத்துவக் குழுவின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்" என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com