வர்றார் ஜேசன் பெரண்டோர்ஃப்: மிரட்டுது ஆஸி!

வர்றார் ஜேசன் பெரண்டோர்ஃப்: மிரட்டுது ஆஸி!
வர்றார் ஜேசன் பெரண்டோர்ஃப்: மிரட்டுது ஆஸி!

இந்திய அணியுடனான டி20 போட்டியில், தான் களமிறங்க இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெரண்டோர்ஃப் கூறியுள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ராஞ்சியில் நாளை நடக்கிறது. இதில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது. அதே போல ஆஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. டி20 போட்டிக்காக, 5 புதிய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருது வந்துள்ளனர். அந்த அணியின் 14 வீரர்களில், 10 பேர் ஐபிஎல் போட்டியில் விளையாடியவர்கள். இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெரண்டோர்ஃப் சேர்க்கப்பட இருக்கிறார். சேர்க்கப்பட்டால், இது அவருக்கு முதல் டி20 போட்டியாக இருக்கும்.

இதுபற்றி ஜேசன் கூறும்போது, ’காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்தேன். இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். இதற்காக அதிக பயிற்சியில் ஈடுபட்டேன். இந்தியாவுடன் விளையாட அதிக உற்சாகத்துடன் உள்ளேன். பழைய தவறுகளை மறந்து இந்தப் போட்டிகளில் புதிதாக களமிறங்குவோம். புதிய எனர்ஜியுடன் வெற்றியை நோக்கி எங்கள் பயணம் இருக்கும்’ என்றார். ஒரு நாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, டி20 போட்டியை கைப்பற்ற வேண்டும் என்ற வெறியுடன் நாளை களமிறங்கத் திட்டமிட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com