‘ஐ.பி.எல் தொடக்க விழாவில் பி.சி.சி.ஐ மாநில உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை’ ஜெய் ஷா

‘ஐ.பி.எல் தொடக்க விழாவில் பி.சி.சி.ஐ மாநில உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை’ ஜெய் ஷா
‘ஐ.பி.எல் தொடக்க விழாவில் பி.சி.சி.ஐ மாநில உறுப்பினர்களுக்கு அழைப்பில்லை’ ஜெய் ஷா

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் துபாயில் ஆரம்பமாக உள்ள ஐ.பி.எல் தொடரின் தொடக்க விழாவில் பி.சி.சி.ஐ மாநில பிரிவு உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்பில்லை என தெரிவித்துள்ளார் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா.

பி.சி.சி.ஐ -யின் மாநில பிரிவுகளின் பிரதிநிதிகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. 

‘ஐ.பி.எல் தொடக்க விழா மற்றும் பிளே-ஆஃப் போட்டிகளுக்கு உறுப்பினர் சங்கங்களிலிருந்து பிரதிநிதிகளை அழைப்பது பி.சி.சி.ஐ -யின் வழக்கமான நடைமுறையாகும். ஆனால் கொரோனா தொற்றுநோயால் கடுமையான கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அதை செய்ய முடியவில்லை.

பி.சி.சி.ஐ -யின் வலிமை அதன் உறுப்பினர்களிடம் தான் உள்ளது, மேலும் கொள்கை அடிப்படையில் பொதுக்குழுவின் ஒப்புதலின் பேரில் மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளோம்’ என கடிதத்தில் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com