' வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறுவது கஷ்டமாக இருக்கிறது'- கங்குலி

' வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறுவது கஷ்டமாக இருக்கிறது'- கங்குலி
' வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறுவது கஷ்டமாக இருக்கிறது'- கங்குலி

கொல்கத்தாவில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார் கங்குலி. இதன் மதிப்பு ரூ.40 கோடி என்று கூறப்படுகிறது.

பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, மேற்கு வங்காளம் மாநிலம் பெஹாலாவில் உள்ள பீரன் ராய் சாலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கங்குலி கொல்கத்தாவில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு ரூ.40 கோடி என்று கூறப்படுகிறது. இரண்டு மாடி கொண்ட இந்த வீட்டை இடித்து விட்டு தனது விருப்பத்திற்கேற்ப புதிதாக வீடு கட்ட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய வீடு குறித்து கங்குலி கூறுகையில், “சொந்த வீடு கிடைத்ததில் மகிழ்ச்சி. மத்திய கொல்கத்தா பகுதியில் வீடு இருப்பது வசதியானதாக இருக்கும். ஆனால், 48 வருடங்களாக நான் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறுவது கஷ்டமாக உள்ளது'' என்றார். மத்திய கொல்கத்தா பகுதியில் கங்குலி வீடு வாங்கியுள்ள தகவலையறிந்து அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com