டிஆர்எஸ் சர்ச்சை: ஆஸி. வீரர்கள் மீது புகார் கொடுத்த பிசிசிஐ

டிஆர்எஸ் சர்ச்சை: ஆஸி. வீரர்கள் மீது புகார் கொடுத்த பிசிசிஐ
டிஆர்எஸ் சர்ச்சை: ஆஸி. வீரர்கள் மீது புகார் கொடுத்த பிசிசிஐ

டிஆர்எஸ் சர்ச்சை தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்துள்ளது.

பெங்களூரு டெஸ்டில் டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த பெவிலியனில் இருந்த வீரர்களிடம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் உதவி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஸ்மித் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், ஸ்மித்தின் செயல் தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மாறுபட்ட கருத்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ஸ்மித் மற்றும் விராத் கோலி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று ஐசிசி தெரிவித்திருந்தது. இந்தநிலையில், டிஆர்எஸ் சர்ச்சை தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் மீது பிசிசிஐ தரப்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com