இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா சேர்ப்பு

இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா சேர்ப்பு

இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா சேர்ப்பு
Published on

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒரு மாதத்துக்கும் மேலாக இங்கிலாந்தில் முகாமிட்டு இருக்கிறது. இதில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்த சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களை விடுவித்து கூடுதல் வீரர்களை சேர்த்து பிசிசிஐ புதிய அணியை அறிவித்துள்ளது.

இதில் இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், சாஹா, அபிமன்யூ ஈஸ்வரன், பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com