கேதர், டுபிளிசிஸ், முரளிவிஜய்... சிஎஸ்கே-வை வாட்டும் காயம்!

கேதர், டுபிளிசிஸ், முரளிவிஜய்... சிஎஸ்கே-வை வாட்டும் காயம்!

கேதர், டுபிளிசிஸ், முரளிவிஜய்... சிஎஸ்கே-வை வாட்டும் காயம்!
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னணி வீரர்கள் காயமடைந்துள்ளதால் அந்த அணி கவலையில் இருக்கிறது.

பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நடந்துவருகிறது. முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை, திரில்லிங் வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை, அணி, சொந்தமண்ணில் கொல்கத்தா அணியை இன்று எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கிறார். கொல்கத்தா அணியும் தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி தெம்பாக இருக்கிறது. 

இரண்டு அணியும் இரண்டு முறை கோப்பையை வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளிலும் பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். கொல்கத்தா அணியில் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன், அதிரடி காட்டி வருகிறார். கடந்த போட்டியில் அவர் அடித்த 50 ரன்கள் அணியின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

சென்னை அணியை பொறுத்தவரை, காயம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் பயிற்சியின் போது அடைந்த காயத்தால் முதல் போட்டியில் விளையாடவில்லை. மிடில் ஆர்டரில் கலக்கும் அம்பதி ராயுடு ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார். மிடில் ஆர்டரில் கலக்கும் கேதர் ஜாதவ் முதல் போட்டியில் காயமடைந்தார். இதனால் அவர் தொடரில் இடம் பிடிப்பது கஷ்டம். டுபிளிசிஸும் காயமடைந்துள்ளதால், சிஎஸ்கே சரியான வீரரை தேர்ந் தெடுக்க தடுமாறி வருகிறது. 

இதுபற்றி சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளர் டேவிட் ஹசி கூறும்போது, ‘கேதர் ஜாதவ் திறமையான வீரர். காயமடைந்துள்ளதால் அவர் அணியில் இனி இடம் பிடிப்பது கஷ்டம். அவர் இல்லாதது அணிக்கு பின்னடைவுதான்’ என்றார். ஜாதவுக்கு பதில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி-க்கு அணியில் இடம் பிடிக்கிறார்.

முரளி விஜய் காயம் குணமடைந்தால் இன்றைய போட்டியில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார். 

கடந்த போட்டியில் ’சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவும் தோனியும் ரசிகர்களை ஏமாற்றினார்கள். இன்றைய போட்டியில் ரெய்னாவின் அதிரடி சரவெடியை எதிர்பார்க்கலாம். ஆல்ரவுண்டர் பிராவோ முதல் போட்டியிலேயே ரன்மழை பொழிந்ததால் இந்தப் போட்டியிலும் அவர் கலக்குவார் என்று தெரிகிறது.

இரண்டு வருட தடைக்கு பின் களம் திரும்பி இருக்கும் சிஎஸ்கே, சொந்த ஊரில் வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாகப் போராடும். இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. 

ஐ.பி.எல். போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் இதுவரை 16 முறை மோதி, சென்னை அணி 10 முறையும், கொல்கத்தா 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com