இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் - மீண்டும் டாஸ் வென்ற வங்கதேசம்!

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் - மீண்டும் டாஸ் வென்ற வங்கதேசம்!
இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் - மீண்டும் டாஸ் வென்ற வங்கதேசம்!

இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று சட்டோகிராமில் இருக்கும் ஜஹூர் அகமது சவுதரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசம் வென்றுள்ளது. இந்நிலையில் 3ஆவது போட்டியில் ஆறுதல் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச தீர்மானித்திருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதில் ரோகித் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷனும், தீபக் சஹாருக்கு பதில் குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்படுவார்.

இந்திய அணி: இஷான் கிஷன், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com