டி20 உலகக்கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங்! அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

டி20 உலகக்கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங்! அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?
டி20 உலகக்கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங்! அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா தனது நான்காவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானையும் 2வது ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தி அசத்திய இந்திய அணி  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. தற்போது தமது பிரிவில் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து விளையாடுகிறார். மேலும் தீபக் ஹூடா வெளியில் அமர்த்தப்பட்டு, அக்சர் பட்டேல் மீண்டும் உள்ளே சேர்க்கப்பட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com