டாஸ் வென்றது வங்கதேசம் ! இந்தியா பேட்டிங்

டாஸ் வென்றது வங்கதேசம் ! இந்தியா பேட்டிங்
டாஸ் வென்றது வங்கதேசம் ! இந்தியா பேட்டிங்

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற  வங்கதேசம் கேப்டன் மகமதுல்லா  பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதனால் இந்தியா இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது. 

வங்கதேசம் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டியில், வெற்றி பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது வங்கதேசம். ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மாவின் அதிரடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது டி-20 போட்டி, நாக்பூரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

இந்த டி-20 தொடர், 1-1 என்ற சமநிலையில் இருப்பதால், தொடரை வெல்வதற்காக இரு அணிகளும் கடும் முனைப்புக் காட்டும். இதனால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com