டாஸ் வென்றது ராஜஸ்தான் - பெங்களூர் முதல் பேட்டிங்

டாஸ் வென்றது ராஜஸ்தான் - பெங்களூர் முதல் பேட்டிங்
டாஸ் வென்றது ராஜஸ்தான் - பெங்களூர் முதல் பேட்டிங்

பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸை வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ராஜஸ்தான் அணியில் அஸ்டான் டர்னருக்கு பதிலாக மஹிபால் லாம்ரொர் இடம்பிடித்துள்ளார். பெங்களூர் அணியில் நெகி மீண்டும் இடம்பிடித்துள்ளார். அத்துடன் வேகப்பந்து வீச்சாளர் குல்வாண்ட் கெஜ்ரோலியாவிற்கு இந்தப் போட்டியில் முதல் முறை வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் பெங்களூர் அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும், ராஜஸ்தான் அணி 10 புள்ளிகளுடன் அதற்கு முந்தை இடத்திலும் உள்ளது. 

டாஸ் முடிந்த பிறகு பேசிய கோலி, “நான் டாஸ் வெல்வதற்கு பயிற்சி எடுக்கப்போகிறேன். ஏனென்றால் இதுவரை நான் 13ல் 10 டாஸ்களை தோற்றுள்ளேன்” என்று கிண்டலாக கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com