6வது போட்டியிலும் தோல்வி - பெங்களூர் அணிக்கு தொடர் ஏமாற்றம்

6வது போட்டியிலும் தோல்வி - பெங்களூர் அணிக்கு தொடர் ஏமாற்றம்
6வது போட்டியிலும் தோல்வி - பெங்களூர் அணிக்கு தொடர் ஏமாற்றம்

ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து 6 போட்டிகளில் பெங்களூர் அணி தோல்வியடைந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 20வது போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் கோலி அதிக பட்சமாக 41 (33) ரன்கள் எடுத்தார். அத்துடன் மொயின் அலி 32 (18), அக்‌ஷ்தீப் நாத் 19 (12) மற்றும் டி வில்லியர்ஸ் 17 (16) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். டெல்லி அணியில் மிரட்டலாக பந்துவீசிய ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பிருத்வி ஷா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்து விளையாடினர். பிருத்வி ஷா 28 (22) ரன்களில் அவுட் ஆகினார். ஆனால் ஸ்ரேயாஸ் நிலைத்து விளையாடி அரை சதமடித்து, பின்னர் 67 (50) ரன்களில் விக்கெட்டை இழந்தார். இறுதி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்து பெங்களூர் அணி மிரட்டியது. ஆனாலும் 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி எளிதாக இலக்கை எட்டியது. இதனால் பெங்களூர் அணி 6 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com