ஸ்ரீகாந்த் இருந்தா காமெடிக்கு பஞ்சமிருக்காது: பத்ரிநாத்

ஸ்ரீகாந்த் இருந்தா காமெடிக்கு பஞ்சமிருக்காது: பத்ரிநாத்

ஸ்ரீகாந்த் இருந்தா காமெடிக்கு பஞ்சமிருக்காது: பத்ரிநாத்
Published on

கிரிக்கெட் ஆடுவதை விட வர்ணனை பண்ணுவது ஈசியாக இருக்கிறது என்று கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கூறினார். 

சமீபத்தில் நடந்த சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது விளையாட்டு சேனல் ஒன்றில் தமிழ் வர்ணனையாளராகக் கலந்துகொண்டார் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத். அந்த அனுபவம் பற்றி அவரிடம் கேட்டபோது மேற்கண்டவாறு சொன்னார். 
அவர் மேலும் கூறும்போது, ‘ எனது சிறுவயதில் பில் லாரியின் வர்ணனையை கேட்டிருக்கிறேன். பல அனுபவங்களை அவர் வர்ணனையில் இடையே சொல்லுவார். அதே போல டோனி கிரேக்கின் வர்ணனையும் பிடிக்கும். முக்கியமாக வித்தியாசமான அவரது குரல். மைதானத்தில் விளையாடுவதை விட வர்ணனை செய்துவது ஈசியாக இருந்தாலும் அது என்னை சோம்பேறி ஆக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் வர்ணனை பண்ணுவதும் எளிதான காரியம் அல்ல. வீரர்களை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களின் பின்னணி, அணியின் பின்னணி, அவர்களின் பெயர்களை எப்படி சரியாக உச்சரிக்க வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நாங்கள் தூய தமிழில் வர்ணனை செய்யவில்லை. ஆங்கிலம் கலந்தே பேசினோம். அதாவது தங்கிலிஷில் வர்ணனை செய்தோம். என்னுடன் ஸ்ரீகாந்த் இருந்தார். அவர் அருகில் இருந்தால் காமெடிக்கு பஞ்சமிருக்காது’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com