பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் அரையிறுதி: சாய்னா தோல்வி

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் அரையிறுதி: சாய்னா தோல்வி

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் அரையிறுதி: சாய்னா தோல்வி
Published on

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பதக்கங்களை உறுதி செய்திருந்த இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அரையிறுதியில் போராடி தோல்வியடைந்தார். 


ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பேட்மிண்டன் உலக சாம்பயின்ஷிப் தொடரில் இன்று பெண்களுக்கான முதல் அரையி‌றுதியில் தொடரின் 12-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா நேவால், ஏழாம் நிலை வகிக்கும் ஜப்பான் வீராங்கனை நசோமி ஒக்குஹாரா உடன் மோதினார். 


முதல் செட்டை 21-12 என சாய்னா எளிதில் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டில் ஜப்பான் வீராங்கனை சிறப்பாக விளையாடினார். இதனால், சாய்னா 17-21 என்ற  கணக்கில் 2வது செட்டை இழந்தார். வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய 3-வது செட்டில் சாய்னா சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 10-21 என்கிற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் சாய்னா அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கல பதக்கத்தை மட்டுமே வென்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com