இரண்டாவது டெஸ்ட் போட்டி: வெளியே குல்தீப்.. உள்ளே அக்சர் படேல் - காரணம் இதுதான்!

இரண்டாவது டெஸ்ட் போட்டி: வெளியே குல்தீப்.. உள்ளே அக்சர் படேல் - காரணம் இதுதான்!
இரண்டாவது டெஸ்ட் போட்டி: வெளியே குல்தீப்.. உள்ளே அக்சர் படேல் - காரணம் இதுதான்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. மொகாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். 

குல்தீப் யாதவுக்கு மாற்றாக அக்சர் படேல் அணியில் இடம் பெற்றுள்ளார். முதல் டெஸ்ட் போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக அவர் இடம் பெறவில்லை. முன்னதாக கொரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் இடம் பெறவில்லை. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 12-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com