இந்திய பேட்ஸ்மேன்களை உசுப்பேற்றும் விதமாக கேள்வி கேட்ட ஆஸ்திரேலிய வீரர்!

இந்திய பேட்ஸ்மேன்களை உசுப்பேற்றும் விதமாக கேள்வி கேட்ட ஆஸ்திரேலிய வீரர்!
இந்திய பேட்ஸ்மேன்களை  உசுப்பேற்றும் விதமாக கேள்வி கேட்ட ஆஸ்திரேலிய வீரர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்களை முதல் இன்னிங்ஸில் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்மித் - லபுஷேன் என இருவரும் அந்த அணிக்கு 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இருப்பினும் இரண்டாவது நாளை இந்தியா தனக்கு சாதகமாகவே முடித்துள்ளது.

தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் ஷர்மாவும், கில்லும் இந்தியாவுக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அப்போது சிறப்பாக களத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொண்டனர். அவர்களை பந்துவீச்சால் வீழ்த்த முடியாவிட்டால் என்ன என வார்தைப்போரில் ஈடுபட்டு, அவர்களை எமோஷனலாக சீண்டி விக்கெட்டை வீழ்த்தலாம் என்ற யோசனைக்கு வந்தனர் ஆஸ்திரேலிய வீரர்கள்.

வார்த்தை போரில் ஈடுபடுவதில் அவர்கள் வல்லவர்களும் கூட என கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்வது உண்டு. அந்த வகையில் அந்த அணியின்  மார்னஸ் லபுஷேன் இந்தியாவின் கில் மற்றும் ரோகித்தை சீண்டினார். கில்லிடம் “உனக்கு பிடித்தது யார்? சச்சினா? கோலியா?” என்றார். அதே போல ரோகித்திடம் “கொரோனா தொற்று காரணமா தனிமைப்படுத்தப்பட்டு இருக்குற அப்போ என்ன செய்வீங்க?” என்பது மாதிரியான சீண்டல்கள் நீண்டன. கில் 50 ரன்களிலும், ரோகித் 26 ரன்களிலும் அவுட்டானது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com