ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சு

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சு
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சில போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்படுவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். டவுன்டன் நகரில் இன்று நடைபெறும் 17வது போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. 

உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இதுவரை தலா 3 போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆஸ்திரேலியா இரண்டில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் கண்டுள்ளன. பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளன. ஒரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 

ஆஸ்திரேலியா அணி மிகவும் வலிமையுடன் காணப்படுவதால் அது வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியையே பாகிஸ்தான் தன்னுடைய பேட்டிங் பலத்தால் வீழ்த்தியிருக்கிறது. அதனால், போட்டியில் சற்றே பரபரப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com