ஆஸ்திரேலியா அதிரடி ஆட்டம் : மழையால் தடைபட்ட போட்டி

ஆஸ்திரேலியா அதிரடி ஆட்டம் : மழையால் தடைபட்ட போட்டி

ஆஸ்திரேலியா அதிரடி ஆட்டம் : மழையால் தடைபட்ட போட்டி
Published on

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி தற்போது மழையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்று டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆர்ஸி ஷார்ட் 7 (12) ரன்களில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் வீசிய சுழலில் கேட்ச் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் தொடர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். அதிரடியாக விளையாடிய கிரிஷ் லின் 37 (20) ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினர் 16.1 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

மேக்ஸ்வெல் 46 (23) மற்றும் மார்கஸ் 31 (18) ரன்கள் எடுத்த நிலையில் போட்டி மழையால் தடைபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com