டாஸ் வென்ற ஆஸி.பேட்டிங்: பிஞ்ச், ஹாண்ட்ஸ்கோம்ப் சேர்ப்பு

டாஸ் வென்ற ஆஸி.பேட்டிங்: பிஞ்ச், ஹாண்ட்ஸ்கோம்ப் சேர்ப்பு

டாஸ் வென்ற ஆஸி.பேட்டிங்: பிஞ்ச், ஹாண்ட்ஸ்கோம்ப் சேர்ப்பு
Published on

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 5 ஒரு நாள் போட்டி தொடரில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. 3-வது போட்டில் இந்தூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில், ஹில்டன் கார்ட்ரைட்டுக்கு பதிலாக ஆரோன் பிஞ்சும், விக்கெட் கீப்பர் மாத்யூ வாடேவுக்கு பதிலாக ஹாண்ட்ஸ்கோம்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.
 
 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com