ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சிவா தாபா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்
ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்களான சிவா தாபா, சுமித் சங்வான் ஆகியோர் இறுதிச்சுற்றுப் போட்டிக்கு முன்னேறினர்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 60 கிலோ எடைப் பிரிவு போட்டியில் அரை இறுதியில் 4 ஆம் நிலை வீரரான இந்தியாவின் சிவா தாபா, ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும் முதல் நிலை வீரருமான மங்கோலியாவின் டோர்ஜினம்பூக் ஓட்கொண்டலை தோற்கடித்தார்.
சிவா தாபா இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் எல்னூர் அப்துரையோவை எதிர்த்து விளையாடுகிறார். கடந்த ஆண்டு லைட் வெயிட் பிரிவுக்கு மாறிய சிவா தாபா, முதன் முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார்.
91 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சுமித் சங்வான், 2 ஆம் நிலை வீரரான தஜகிஸ்தானியின் ஜாகான் குர்பனோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.