25 வயதில் ஓய்வை அறிவித்தது ஏன்? உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை சொல்லும் காரணம்

25 வயதில் ஓய்வை அறிவித்தது ஏன்? உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை சொல்லும் காரணம்
25 வயதில் ஓய்வை அறிவித்தது ஏன்? உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீராங்கனை சொல்லும் காரணம்

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தனது 25-வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்து விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று இதுவரை 15 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். 2019ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டியிலும், 2021ஆம் ஆண்டு விம்பிள்டன் போட்டியிலும், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலும் பட்டங்களை வென்றுள்ளார். தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து வந்த ஆஷ்லி பார்ட்டி, தனது 25-வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்து விளையாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஆஷ்லி பார்டி, ''தனிப்பட்ட முறையில் எனக்கு பல கனவுகள் உள்ளன. ஆனால் உலகம் முழுவதும் சுற்றி எனது குடும்பத்தையும், சொந்த ஊரையும் பிரிந்திருக்க முடியவில்லை. டென்னிஸ் விளையாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். எனது வாழ்வில் அது என்றும் ஒரு அங்கமாக இருக்கும். ஆனால் இனி நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இல்லாமல், ஒரு சாதாரண பெண்ணாக வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com