ஒலிம்பிக் குத்துச்சண்டையில் ஆசிஷ் குமார் தோல்வி

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் ஆசிஷ் குமார் தோல்வி

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் ஆசிஷ் குமார் தோல்வி
Published on

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டையில் 75 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் ஆசிஷ் குமார் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 75 கிலோ எடை பிரிவுக்கான முதல் சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஆசிஷ்குமார் சீனாவின் டுஹேடாவுடன் மோதினார். இருவரும் தொடக்கத்தில் இருந்து கடுமையாக போராடினர். மொத்தம் 3 சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் புள்ளிகள் அடிப்படையில் 5-0 என்ற கணக்கில் சீன வீரர் டுஹேடா வெற்றிப்பெற்றார். ஆசிஷ் குமாரின் இந்த தோல்வியால் குத்துச்சண்டையில் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு எட்டாக் கனியானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com