முன்னதாக வெண்கலப் பதக்கத்திற்கு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. போட்டியில் தொடக்கம் முதல் அதிரடி காட்டிய பிரான்ஸ் அணி ஒரு புறம் இந்தியாவின் கோல் முயற்சிகளை முறியடித்துக் கொண்டே இருந்தது. மறுபுறம் அந்த அணியின் கேப்டன் டிமோத்தி க்ளெமெண்ட் ஹாட்ரிக் கோல்களை அடித்தார். இறுதியில் இந்திய அணி 1- 3 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தையும் இழந்தது.