பேட்டிங் செய்ய தாமதம்: எதிரணி பேட்ஸ்மேனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்பதி ராயுடு

பேட்டிங் செய்ய தாமதம்: எதிரணி பேட்ஸ்மேனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்பதி ராயுடு
பேட்டிங் செய்ய தாமதம்: எதிரணி பேட்ஸ்மேனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அம்பதி ராயுடு

அம்பதி ராயுடுவும் ஷெல்டனும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக சென்று வாக்குவாதம் செய்ததால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் மிக பிரபலமான உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் பரோடா மற்றும் சவுராஷ்டிரா அணிகள் மோதின. இப்போட்டியில் பரோடா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சவுராஷ்டிரா வெற்றி பெற்றது.

இதனிடையே இந்தப் போட்டியின் போது சவுராஷ்டிரா பேட்ஸ்மேன் ஷெல்டன் ஜாக்சனுக்கும் பரோடா அணியின் கேப்டன் அம்பதி ராயுடுவுக்கு இடையில் கடும் வாக்குவாதம் உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஷெல்டன் பேட்டிங் செய்ய தாமதமானதால் மைதானத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்த அம்பதி ராயுடு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு ஷெல்டனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக சென்று வாக்குவாதம் செய்ததால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Rayudu Vs Sheldon Jackson verbal fight. After the incident happened Sheldon tried to swing every ball and played 4 dots in a Row and on the last ball he got bowled. classic example of Ego winning over class<a href="https://twitter.com/hashtag/AmbatiRayudu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#AmbatiRayudu</a> <a href="https://twitter.com/hashtag/sheldonjackson?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#sheldonjackson</a> <a href="https://twitter.com/hashtag/SMAT2022?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#SMAT2022</a> <a href="https://t.co/xwHO14LqVE">pic.twitter.com/xwHO14LqVE</a></p>&mdash; Soham (@Soham2982) <a href="https://twitter.com/Soham2982/status/1580194545974714368?ref_src=twsrc%5Etfw">October 12, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இதையடுத்து அங்கு இருந்த நடுவர்கள் மற்றும் சக வீரர்கள் இரு வீரர்களையும் விலக்கிவிட்டு சமாதானப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து சிறிது நேரத்திற்குப் பின்னர் மீண்டும் போட்டி நடத்தப்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிக்க: 'நாங்கள் பாகிஸ்தான் அணியை மதிக்கிறோம்; அதேபோல தான் அவர்களும்' - அஷ்வின் பக்குவம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com