ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் : காலிறுதியில் சாய்னா தோல்வி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் : காலிறுதியில் சாய்னா தோல்வி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் : காலிறுதியில் சாய்னா தோல்வி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டித் தொடரின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் சாய்னா நெய்வால் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டித் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வரும் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தரவரிசையில் முதல் 32 இடங்களை பிடித்துள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாய்னா ஆகியோரும் இடம்பெற்றனர். ஆண்கள் பிரிவில் இந்தியாவில் ஸ்ரீகாந்த் பங்கேற்றுள்ளார்.

காலிறுதி சுற்றில் இன்று தைவானின் டாய் ட்ஸூ யிங்கை எதிர்த்து சாய்னா விளையாடினார். விறுவிறுப்பாக நடந்த போட்டியில் 15-21,19-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து அவர் வெளியேறினார். இது சாய்னாவிற்கு எதிராக யிங் தொடர்ச்சியாக பெறும் 13வது வெற்றியாகும். இந்த இரு வீராங்கனைகளும் இதுவரை 20 முறை விளையாடியுள்ளனர். அதில் சாய்னா 5 முறையும் யிங் 15 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். 

மேலும் இந்த தோல்வி குறித்து சாய்னா நெய்வால் கூறும்போது, “இந்தப் போட்டியில் எனக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் நான் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அத்துடன் நான் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தேன். நான் யிங்கை தோற்கடிப்பதற்கு கற்றுகொள்ளவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மற்றொரு முக்கிய இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com