“அஸ்வினா?.. ஜடேஜாவா?..கோலியே முடிவு செய்வார்” ரஹானே

“அஸ்வினா?.. ஜடேஜாவா?..கோலியே முடிவு செய்வார்” ரஹானே
“அஸ்வினா?.. ஜடேஜாவா?..கோலியே முடிவு செய்வார்” ரஹானே

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அல்லது ஜடேஜா விளையாடுவாரா என்பதை கோலியே முடிவு செய்வார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து உடனான முதல் டெஸ்ட்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி 29 ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஹானே பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய அவர், “முதல் டெஸ்டில் என்ன தவறு செய்தோமோ அதை 2-வது டெஸ்டில் சரி செய்யவேண்டும். ஒரு பேட்ஸ்மேன் தற்போதைய நிலையில் கவனம் செலுத்தவேண்டும். பழையதை மறக்க வேண்டும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது” என்றார்

மேலும், தொடர்ந்த ரஹானே, “டெஸ்ட் தொடரை வெல்வது மட்டும் முக்கியமல்ல. ஏனெனில், இங்கு ஒரு டெஸ்டில் வென்றாலும் 60 புள்ளிகளை கிடைக்கும் அதனை வைத்து புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி வெகுவாக முன்னேறிவிடும். அதனால் தான் சொல்கிறேன். முதல் டெஸ்டில் நடந்ததை மறந்துவிடுங்கள். ஆனால், அதில் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு 2-வது டெஸ்டில் கவனம் செலுத்தவோம். 2-வது டெஸ்டுக்கான ஆடுகளம், பேட்டிங்குக்கு ஏற்றவாறு, ஷாட்களை அடிக்கும் விதம் அமையும். ஆடுகளம் மற்றும் சூழலை எப்போதும் எண்ணிக்கொண்டிருக்க முடியாது” என்றார்.

இரண்டாவது டெஸ்ட்டின் பிட்ச் குறித்து பேசிய ரஹானே, “இந்திய ஏ அணியினர் அதிகாரபூர்வமற்ற டெஸ்டைக் கடந்த மாதம் இங்கு ஆடினார்கள். கிரைஸ்ட் சர்ச் ஆடுகளம், முதல் டெஸ்டில் பார்த்ததை விடவும் நன்றாக இருப்பதாக அந்த ஆட்டத்தில் இடம்பெற்ற விஹாரி கூறினார். முதல் நாளிலேயே ஆடுகளம் பற்றி அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு விளையாட வேண்டும். அஸ்வின், ஜடேஜா இருவரில் யார் விளையாடுவார்கள் எனக் கேட்கிறீர்கள். இருவருமே தரமான பந்துவீச்சாளர்கள். ஆடுகளத்தைப் பார்த்தபிறகே கோலி இதுகுறித்து முடிவு செய்வார்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com