அடுத்தடுத்து ஐபிஎல் கோப்பை - நேற்று சிஎஸ்கே; இன்று மும்பை

அடுத்தடுத்து ஐபிஎல் கோப்பை - நேற்று சிஎஸ்கே; இன்று மும்பை

அடுத்தடுத்து ஐபிஎல் கோப்பை - நேற்று சிஎஸ்கே; இன்று மும்பை

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது மும்பை அணி. 

ஐபிஎல் போட்டிகள் என்றால் இரண்டு அணிகள் தான் அதிக அளவில் தாக்கம் செலுத்தி வந்துள்ளன. ஒன்று மும்பை இண்டியன்ஸ். மற்றொன்று சென்னை சூப்பர் கிங்ஸ். மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கும் நிலையில், மும்பை இண்டியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஐந்தாவது முறை கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் தொடக்கம் முதலே எதிரணிகளை வெளுத்து வாங்கி முன்னிலையில் இருந்தது மும்பை இண்டியன்ஸ் அணி. அதேபோல், பிளே ஆஃப் சுற்றிலும் அசால்டாக டெல்லியை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தது. இறுதிப் போட்டியிலும் டெல்லி அணியை ஊதி தள்ளி எளிதாக ஐபிஎல் கோப்பையை தக்க வைத்தது.

இந்த வெற்றியின் மூலம் சென்னையை அடுத்து தொடர்ச்சியாக அடுத்தடுத்த இரண்டு சீசன்களில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது மும்பை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2011 சீசனில் இந்த சாதனையை படைத்துள்ளது.

மும்பை 2019 மற்றும் 2020 என தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் கோப்பையை வென்றுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com