‘அது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மெசேஜ்’- நெகிழ்ந்த தேவ்தத் படிக்கல்

‘அது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மெசேஜ்’- நெகிழ்ந்த தேவ்தத் படிக்கல்
‘அது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மெசேஜ்’- நெகிழ்ந்த தேவ்தத் படிக்கல்

அமீரகத்தில் அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் சீசனிலேயே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இளம் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல். அதனால் வளர்ந்து வரும் வீரர் விருதும் அவருக்கு அளிக்கப்பட்டது. 

15 போட்டிகளில் விளையாடியுள்ள தேவ்தத் 473 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். இந்நிலையில் தனது ஆட்டத்தை வெகுவாக பாராட்டிய ஆர்.சி.பி அணியின் சக வீரரும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான டிவில்லியர்ஸ் அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து பகிர்ந்துள்ளார் தேவ்தத்…

“மாடர்ன் கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன்களான கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ்  உடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது நல்ல அனுபவமாக அமைந்தது. கிரிக்கெட் குறித்த நிறைய நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். இதில் கேப்டன் கோலியுடன் களத்தில் நீண்ட நேரம் விளையாடும் வாய்ப்பு கிடைத்த எனக்கு ஏபிடி உடன் விளையாட கிடைக்காமல் போனது. அவர் பேட் செய்யும்போது மறுமுனையில் நின்று பார்த்துக் கொண்டிருக்க ஆசையாக இருக்கும். முதல் பந்திலேயே பவுலர்களை டார்கெட் செய்யும் பேட்ஸ்மேன். 

மும்பை உடனான ஆட்டத்தில் 70 ரன்களை நான் குவித்திருந்தேன். அந்த ஆட்டம் முடிந்து பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி எனது ஆட்டத்தை பாராட்டியிருந்தார் ஏபி டிவில்லியர்ஸ். ‘நீங்கள் அபாரமாக விளையாடுகிறீர்கள். தொடர்ந்து இதே மாதிரியான ஆட்டத்தில் டெலிவர் செய்யுங்கள். உங்கள் ஆட்டத்தை அனுபவித்து விளையாடுங்கள்’ என சொல்லியிருந்தார். அது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மெசேஜ்” என சொல்லியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com