'எம்.எஸ்.தோனி இந்த ஐபிஎல் மட்டுமல்ல 2021, 2022 ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்று சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்ததற்கு ஆகாஷ் சோப்ரா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான ஆகாஷ் சோப்ரா இதுகுறித்து கூறுகையில், ‘’"தோனி அதிக நாட்கள் விளையாடுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். தோனி சமீப நாட்களில் விளையாடுவதை காணாததால், நான் எதுவும் கூற விரும்பவில்லை. அவர் சிஎஸ்கே அணிக்காக மட்டுமே காணப்படுகிறார்" என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ''தோனி தொடர்ந்து இன்னும் சில ஆண்டுகளுக்கு விளையாட உள்ளதால் இப்போதைக்கு ஓய்வு பெற மாட்டார் எனத் தெரிகிறது. அவர் விளையாடுவதைப் பார்க்க நான் ஆவலோடு இருக்கிறேன். தோனி விளையாடும் போட்டியை காண, டிக்கெட் கட்டணத்தை டபுள் மடங்கு செலுத்தி கூட பார்க்க வருவேன்’’ என்றார்.