வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், கிரிக்கட் வீரர் இஷான் கிஷான் வெறும் 131 பந்துகளுக்கு 210 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். அதில் 24 பவுண்டரிகளும், 10 சிக்ஸர்களும் அடங்கும். அவர் விராட் கோலியுடன் பாட்னர்ஷிப்பில் இணைந்து 290 ரன்களை எடுத்தார். 126 பந்துகளில் இரட்டை சதம் விளாசி உலக சாதனைப் படைத்தது மட்டுமின்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய 4ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.