“இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்” - பூரிக்கும் 87 வயது கிரிக்கெட் ரசிகை

“இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்” - பூரிக்கும் 87 வயது கிரிக்கெட் ரசிகை

“இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்” - பூரிக்கும் 87 வயது கிரிக்கெட் ரசிகை

இந்தியா - பங்களாதேஷின் கிரிக்கெட் போட்டியை நேரடியாக பார்த்து ரசித்து வரும் 87 வயது மூதாட்டி ஒருவரின் செயல் அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது. 

உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்திய டாஸ் வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 37 ஓவர்களின் முடிவில் 6 இழப்புக்கு 191 ரன்களுடன் விளையாடி வருகிறது. இதனிடையே இந்தியா - பங்களாதேஷின் கிரிக்கெட் போட்டியை நேரடியாக பர்த்து ரசித்து வரும் 87 வயது மூதாட்டி ஒருவரின் செயல் அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது.

மூதாட்டி சாருலதா இந்திய தேசிய கொடியினை முகத்தில் வரைந்து கொண்டும் தேசியக்கொடி பதிந்திருக்கும் சால்வையை கழுத்தில் அணிந்து கொண்டும் பீப்பி ஊதி கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 

இதுகுறித்து அவரிடம் கேட்கும்போது, “நான் ஆப்பிரிக்காவில் இருக்கும்போதிலிருந்து பல ஆண்டுகளாக கிரிக்கெட் பார்த்து வருகிறேன். நான் முன்பு வேலை பார்த்து கொண்டிருந்தபோது கிரிக்கெட்டை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன். தற்போது பணி ஓய்வு பெற்று விட்டேன். அதனால் நேரில் கிரிக்கெட்டை பார்த்து ரசித்து வருகிறேன். இந்தியா கண்டிப்பாக உலகக்கோப்பையை வெல்லும். இந்தியா வெற்றிப் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வென்றபோது நான் அங்கிருந்தேன்” எனத் தெரிவித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com