பந்து என நினைத்து வெடிகுண்டுடன் விளையாடிய 7 வயது சிறுவன்... இறுதியில் ஏற்பட்ட சோகம்

பந்து என நினைத்து வெடிகுண்டுடன் விளையாடிய 7 வயது சிறுவன்... இறுதியில் ஏற்பட்ட சோகம்
பந்து என நினைத்து வெடிகுண்டுடன் விளையாடிய 7 வயது சிறுவன்... இறுதியில் ஏற்பட்ட சோகம்

மேற்கு வங்க மாநிலத்தில் வெடிகுண்டை பந்து என நினைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, குண்டு வெடித்து ஏழு வயது சிறுவன் உயிரிழந்தார்.

பர்கானாஸ் மாவட்டத்தில் ரயில் பாதை அருகே நிகழ்ந்த இந்த வெடிகுண்டு விபத்தில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். கொல்கத்தாவில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இரு ரயில் நிலையங்களுக்கு  இடையே உள்ள  தண்டவாளத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த பொருளை பந்து என நினைத்து சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென வெடித்து சிதறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்ததில் மற்றொரு வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: கோவை: காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 5 இளைஞர்கள் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com