கோலி தலைமையை வீழ்த்துமா? நியூசிலாந்து வரலாற்றை மாற்றுமா?

கோலி தலைமையை வீழ்த்துமா? நியூசிலாந்து வரலாற்றை மாற்றுமா?

கோலி தலைமையை வீழ்த்துமா? நியூசிலாந்து வரலாற்றை மாற்றுமா?
Published on

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நாளை நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாடுகிறது. தற்போது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளதால், தொடரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 6 தொடர்களை வென்றுள்ளது. அந்த சாதனையை தக்கவைக்கும் நோக்கில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்று வரலாற்றை மாற்றும் முனைப்பில் நியூசிலாந்து அணி உள்ளது. இரு அணி வீரர்களும் கான்பூர் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com