2 வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்

2 வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்
2 வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி அபார சதம் அடித்தார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த புஜாரா 58 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் மூன்று பேரின் விக்கெட்டையும் ரபாடா எடுத் தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராத் கோலி 63 ரன்களுடனும் ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய ரஹானே அரை சதம் கடந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே கேப்டன் விராத் கோலி, சதம் அடித்தார். இது இவருக்கு 26 வது டெஸ்ட் சதம். இந்த ஆண்டில் அவர் அடித்த முதல் டெஸ்ட் சதமும் இதுதான்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com