இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே நகரில் இன்று தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் ஷிவர் தவானுடன், அபினவ் முகுந்த் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெராத் தலைமையில் களமிறங்கும் இலங்கை அணியில் கருணாரத்னே குஷால் மென்டிஸ், அசெலா குணரத்னா போன்ற இளம் வீரர்களும், உபுல் தரங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற அனுபவ வீரர்களும் உள்ளனர். இலங்கை அணி, கேப்டன் ஹெராத்தின் பந்துவீச்சை அதிகம் நம்பியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஹெராத்தின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக, காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இலங்கை வென்றது.