பாகிஸ்தானில் கிரிக்கெட்: மலிங்கா உட்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்பு

பாகிஸ்தானில் கிரிக்கெட்: மலிங்கா உட்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்பு
பாகிஸ்தானில் கிரிக்கெட்: மலிங்கா உட்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்பு

பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட மலிங்கா, மேத்யூஸ் உட்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். 

2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடியது. அப்போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சில வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்புக் கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாட மறுத்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி, 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. 

இந்த தொடரில் பாதுகாப்பு கருதி பங்கேற்க விரும்பவில்லை என்று இலங்கை டி20 அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா, தனஞ்செய டிசில்வா, அகிலா தனஞ்செயா, லக்மல், சண்டிமல், டிக்வெல்லா, குசால் பெரேரா, கருணாரத்னே ஆகிய 10 வீரர்கள், இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த தொடர், நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கையுடன் உள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com