”ஆண்களாகிய நம்மைவிட பெண்கள் வலிமையானவர்கள்” - விராட் கோலி வாழ்த்து!

”ஆண்களாகிய நம்மைவிட பெண்கள் வலிமையானவர்கள்” - விராட் கோலி வாழ்த்து!
”ஆண்களாகிய நம்மைவிட பெண்கள் வலிமையானவர்கள்” - விராட் கோலி வாழ்த்து!

மகளிர் தினத்தையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகளின் புகைப்படத்தைப் பகிர்ந்து உருக்கமுடன் பெண்களுக்கு வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

நடிகை அனுஷ்கா சர்மாவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் கந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதியினருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது பிறந்துள்ளது. வாமிகா கோலி என்று பெயரிட்டுள்ளார்கள். இந்நிலையில், இன்று மகளிர் தினத்தையொட்டி அனுஷ்கா சர்மாவும் தனது மகளும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து விராட் கோலி உருக்கமுடன் பதிவிட்டு இருக்கிறார்.

அந்தப் பதிவில்,  "குழந்தையின் பிறப்பைப் பார்ப்பது ஒரு மனிதனுக்கு முதுகுத்தண்டை சில்லிட வைக்கும், நம்பமுடியாத மற்றும் ஆச்சரியமான அனுபவமாகும். அதனைப் பார்த்த பிறகு, பெண்களின் உண்மையான வலிமையையும் தெய்வீகத்தன்மையையும், கடவுள் அவர்களுக்குள் ஏன் உயிரைப் படைத்தார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அது ஏனென்றால் அவர்கள் ஆண்களாகிய நம்மைவிட வலிமையானவர்கள். என் வாழ்க்கையின் மிகவும் சக்திமிக்க, இரக்கமுள்ள மற்றும் வலிமையான பெண்ணுக்கும், தனது தாயைப் போல வளரப்போகிறவளுக்கும், உலகின் அனைத்து அற்புதமான பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com