“சென்னையை வீழ்த்த திட்டம் வைத்துள்ளோம்” - பிருத்வி ஷா

“சென்னையை வீழ்த்த திட்டம் வைத்துள்ளோம்” - பிருத்வி ஷா
“சென்னையை வீழ்த்த திட்டம் வைத்துள்ளோம்” - பிருத்வி ஷா

சென்னை அணியின் பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வது மற்றும் வீழ்த்துவது என்பதற்கு திட்டம் வைத்துள்ளதாக பிருத்வி ஷா தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே இன்று 2வது தகுதிச்சுற்று போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால், இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் டெல்லிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலும் சென்னை அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது. எனவே நாளை போட்டியில் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டி தொடர்பாக பேட்டியளித்துள்ள டெல்லி பேட்ஸ்மேன் பிருத்வி ஷா, “போட்டியில் அனைவரும் அவரவர் பங்கை அறிவார்கள் என நினைக்கிறேன். சென்னையுடன் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளோம். சென்னையில் தஹிர், ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகிய சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர். அவர்களை எல்லாம் எப்படி எதிர்கொள்வது, எப்படி வீழ்த்துவது என நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எந்த பவுலர் பந்தில் நிதானமாக அடிப்பது, யார் பந்தை அடித்து விளையாடுவது என்றெல்லாம் திட்டமிட்டு வைத்துள்ளோம். பேட்டிங் களத்திற்கு சென்றதும் அதை நாங்கள் வெளிப்படுத்துவோம். எந்த ஒரு எளிய பந்து கிடைத்தாலும், நான் அடித்து விளையாடுவேன். அது தஹிர் பந்தாக இருந்தாலும் சரி, ஹர்பஜன் வீசும் பந்தாக இருந்தாலும் சரி எளிமையாக பந்தை சிதறிடிப்பேன். போட்டி நடக்கும் மைதானம் இரண்டு பேருக்கும் சொந்த மண் கிடையாது. அதனால் சற்று சவாலான போட்டியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com