”தோற்றாலும் எங்களை ஆதரிக்கிறீர்கள்” - ரசிகர்களுக்கு கோலியின் உருக்கமான பதிவு

”தோற்றாலும் எங்களை ஆதரிக்கிறீர்கள்” - ரசிகர்களுக்கு கோலியின் உருக்கமான பதிவு
”தோற்றாலும் எங்களை ஆதரிக்கிறீர்கள்” - ரசிகர்களுக்கு கோலியின் உருக்கமான பதிவு

ஐபிஎல் 2022 சீசனில் 2வது தகுதிச் சுற்றில் தோல்வியுற்றதை அடுத்து “அடுத்த சீசனில் சந்திப்போம்” என்று ஆர்சிபி ரசிகர்களுக்கு உருக்கமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் விராட் கோலி.

நேற்று நடைபெற்ற 2ஆம் தகுதிச்சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பட்லரின் அதிரடியால் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றியடைந்ததை அடுத்து, ஆர்சிபி அணி இம்முறையும் கோப்பையின்றி வெளியேறும்படி ஆகிவிட்டது. இந்நிலையில் முன்னாள் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி சீசன் முழுவதும் தொடர்ந்து ஆதரவளித்த நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் “சில நேரங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். சில சமயங்களில் நீங்கள் வெற்றி பெறாமல் போவீர்கள். ஆனால் நீங்கள் எங்கள் எல்லா போட்டிகளிலும் எப்பொழுதும் எங்களை ஆதரிப்பீர்கள். நீங்கள் கிரிக்கெட்டை சிறப்பாக ஆக்குகிறீர்கள். கற்றல் ஒருபோதும் நிற்காது. நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்கும் நன்றி. இந்த அற்புதமான தருணத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அனைத்து நபர்களுக்கும் நன்றி. அடுத்த சீசனில் சந்திப்போம்” என்று கோலி பதிவில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com