“அடுத்த போட்டியிலும் வெல்வோம்” - ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை

“அடுத்த போட்டியிலும் வெல்வோம்” - ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை
“அடுத்த போட்டியிலும் வெல்வோம்” - ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை

ஆஷஸ் தொடரின் அடுத்த போட்டியிலும் வெற்றி பெறுவோம் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரட்டை அடித்து மொத்தம் 211 (319) ரன்களை ஸ்மித் குவித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவித்தது. இதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகிய போதிலும் ஸ்மித் மட்டும் 82 ரன்கள் சேர்த்தார். இதனால் போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். 

போட்டியில் வென்றது தொடர்பாக பேசிய ஸ்மித், “மீண்டும் ஆஷஸ் கோப்பை நாங்களே தக்க வைத்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது எதிர்பாராத ஒரு சிறப்பான நிகழ்வு. 2013ஆம் ஆண்டு விளையாடியதைப் போல இந்த முறை விளையாட முடியவில்லை. இருந்தாலும், நாங்கள் மீண்டும் கோப்பை தக்க வைத்திருக்கிறோம். முக்கிய கோப்பைகளை நான் எனது மகிழ்வான குறிப்புகளில் வைத்துக்கொள்வேன். அந்தப் பட்டியலில் தற்போது இந்தக் கோப்பை சேர்ந்துவிட்டது. இந்தப் போட்டியைப் போன்று அடுத்து போட்டியிலும் நாங்கள் வெல்வோம். அணியின் வெற்றிக்கு எங்கள் பந்துவீச்சாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com