”7 ஆண்டுக்கு பின் டிச.18ல் மெஸ்ஸி கையில் கோப்பை இருக்கும்”-இணையத்தை கலக்கும் பழைய டிவீட்

”7 ஆண்டுக்கு பின் டிச.18ல் மெஸ்ஸி கையில் கோப்பை இருக்கும்”-இணையத்தை கலக்கும் பழைய டிவீட்
”7 ஆண்டுக்கு பின் டிச.18ல் மெஸ்ஸி கையில் கோப்பை இருக்கும்”-இணையத்தை கலக்கும் பழைய டிவீட்

உலகக்கோப்பையை வெல்லும் மெஸ்ஸியின் கனவு குறித்து 7 வருடங்களிற்கு முன்பே, மெஸ்ஸியின் ரசிகர் ஒருவர் கணித்து பதிவிட்ட டிவீட் தற்போது வைரலாகி, டிவிட்டரையே கலக்கி வருகிறது.

சர்வதேச அரங்கில் அர்ஜென்டினாவுக்காக தனது கடைசி உலகக்கோப்பை ஆட்டத்தை விளையாட இருப்பதாக தெரிவித்திருக்கும் லியோனல் மெஸ்ஸி, FIFA உலகக் கோப்பை பட்டத்தையும், கோப்பையையும் கையில் ஏந்தவேண்டும் என்ற வேதனையான காத்திருப்பை தற்போதைய பைனலில் மட்டுமே முடிக்க முடியும். அவரது வாழ்க்கையில் ஒரு முறை கூட அவரால் விருப்பப்பட்ட உலகக்கோப்பையை உயர்த்த முடியவில்லை என்னும் ஏக்கம் இந்த உலகக்கோப்பையில் நிறைவேறவேண்டும் என்ற காத்திருப்பு ஒவ்வொரு கால்பந்து ரசிகர்களுக்கும் அதிகமாகவே இருக்கிறது.

இந்நிலையில், 2022 கத்தார் கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியானது நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிக்கும், மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணிக்கும் இடையே நடைபெறவிருக்கும் நிலையில், மெஸ்ஸியின் ரசிகர் ஒருவர் 7 வருடங்களுக்கு முன்பு டிவிட்டரில் பதிவிட்ட பதிவு ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது.

7 வருடங்களிற்கு முன்பு 2015ஆம் ஆண்டு மெஸ்ஸி ரசிகர் பதிவிட்டிருக்கும் அந்த பதிவில், ”டிசம்பர் 18, 2022. 34 வயதான லியோ மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்று எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடன் மீண்டும் பார்க்கவும்” என்று பதிவிட்டிருந்தார். அந்த ரசிகர் மெஸ்ஸி மீது வைத்திருந்த நம்பிக்கையும், மெஸ்ஸி மீதான காதலும் நம்பமுடியாத வகையில் தற்போது அரங்கேறி இருப்பது, டிவிட்டரை ஆச்சரியத்திற்குரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

2014 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி ஜெர்மனி அணியுடன் தோல்வியை தழுவிய நிலையில், வேதனை மற்றும் மெஸ்ஸி மீதான அதீத நம்பிக்கையால், ”ஜோஸ் மிகுவல் போலன்கோ” என்ற அந்த ரசிகர் அன்று பதிவிட்டது இன்று நிறைவேறும் கட்டத்தில் இருக்கிறது.

2014 அன்று ஜெர்மனியுடன் விட்ட அந்த கோப்பையை மீண்டும் மெஸ்ஸி தட்டி பறிக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு , ”ஜோஸ் மிகுவல் போலன்கோ” என்ற ரசிகருக்கு மட்டுமில்லாமல், ஒவ்வொரு மெஸ்ஸி ரசிகர்களுக்கும் இருக்கிறது.

அந்த ரசிகரின் ட்வீட் ஏற்கனவே 17,000 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும், 54,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்று தொடர்ந்து வைரலாகி வருகிறது.

மெஸ்ஸி, தனது 5ஆவது மற்றும் இறுதி உலகக் கோப்பையில் விளையாடுகிறார். 1986 இல் மெக்சிகோ சிட்டியில் டியாகோ மரடோனாவால் ஈர்க்கப்பட்ட வெற்றிக்குப் பிறகு, அர்ஜென்டினாவை முதல் பட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நம்பிக்கையில் இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com