’ஒவ்வொரு போட்டியும் அவருக்கு ”போர்” மாதிரி தான்’- ஷிகர் தவான் குறித்து கைஃப்

’ஒவ்வொரு போட்டியும் அவருக்கு ”போர்” மாதிரி தான்’- ஷிகர் தவான் குறித்து கைஃப்

’ஒவ்வொரு போட்டியும் அவருக்கு ”போர்” மாதிரி தான்’- ஷிகர் தவான் குறித்து கைஃப்
Published on

இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் இந்திய வீரர் ஷிகர் தவான் குறித்து பேசுகையில், ஒவ்வொரு போட்டியும் அவருக்கு போர் மாதிரி தான் என்று கூறியுள்ளார்.

இந்திய அணி வீரர் ஷிகர் தவான் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து முழுவதுமாக ஒதுக்கப்பட்டு ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே பங்குபெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் இனி வரும் ஒவ்வொரு போட்டியும் அவருக்கு போர் மாதிரி தான் என்றும், ஒருவேளை அவர் சரியாக ஆடாமல் போனால் அவர் அணியிலிருந்து விளக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார் முகமது கைஃப்.

இது குறித்து பேசியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிக்கும் வீரர்கள் இருக்கும் போது. ஐபிஎல் கரியரில் 6234 ரன்கள் அடித்துள்ள ஷிகர் தவான் தொடர்ந்து டி20 களில் ஒதுக்கப்பட்டு வருவது எனக்கு ஏன் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் அணிக்காக 500 முதல் 600 ரன்கள் வரை அடித்து முதல் நிலை வீரராக அணிக்கு பெரிய பலமாக இருக்கிறார். ஆனால் அவர் டி20 க்கு தகுந்த வீரர் இல்லை. நீங்கள் சொல்லுங்கள் அவர் டி20 க்கு தகுதி இல்லாத வீரர் என்று உங்களால் கூறமுடியுமா, உங்களால் முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் அவர் தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டும் தான் அனுமதிக்கப்பட்டு விளையாடி வருகிறார். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அவருக்கு சரியாக அமையாமல் போன நிலையில், இனிவரும் ஒவ்வொரு போட்டியும் அவருக்கு போர் மாதிரி தான் என்று தெரிவித்துள்ளார் முகமது கைஃப்.

36 வயதாகும் ஷிகர் தவான் தனது கடைசி டி20 போட்டியை இலங்கைக்கு எதிரான தொடரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஆடியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com