“மரண தண்டனைதான் தீர்வு” - புதுக்கோட்டைச் சம்பவம் குறித்து பத்ரிநாத்

“மரண தண்டனைதான் தீர்வு” - புதுக்கோட்டைச் சம்பவம் குறித்து பத்ரிநாத்
“மரண தண்டனைதான் தீர்வு” - புதுக்கோட்டைச் சம்பவம் குறித்து பத்ரிநாத்

புதுக்கோட்டைச் சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பத்ரிநாத் மரண தண்டனையே இதற்கு தீர்வாகும் எனத் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், “பயம் உண்டாக்கினால் மட்டுமே மேலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்க முடியும். மரண தண்டனையே அதற்குத் தீர்வாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், “செதஞ்ச அந்தப் பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com