உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி!

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி!

உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி!
Published on

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். முடிவில் முதல் 4 இடங்களை பிடிக் கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது. உலக கோப்பை போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.70 கோடி (10 மில்லியன் டாலர்). கோப்பையை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.28 கோடியும் (4 மில்லியன் டாலர்), இரண்டாம் இடம் பெறும் அணிக்கு சுமார் ரூ.14 கோடியும் வழங்கப்பட இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கடந்த முறை (2015ஆம் ஆண்டு) ரூ.26 கோடியும், இரண்டாம் இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரை இறுதியில் தோற்கும் அணிகளுக்கு ரூ.5 கோடியே 61 லட்சம் பரிசாக கிடைக்கும். இந்த தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த உலக கோப்பை போட்டியில் அரை இறுதியில் தோற்ற அணிகளுக்கு ரூ.4 கோடியே 20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.28 லட்சம் கிடைக்கும். லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்படும்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com