திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா - தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, 4 மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
Tirupathi
Tirupathipt desk

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் உற்சவரான மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். கடந்த 22-ஆம் தேதி கருட சேவை நடந்து முடிந்த நிலையில், பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை ரதோற்சவம் எனப்படும் மகா ரதத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.

swamy
swamypt desk
Tirupathi
“ஒரு கோடி முறை கோவிந்த நாமம் எழுதினால்....” திருப்பதி தேவஸ்தானம் அறிவித்த LIFETIME OPTION!

இதையடுத்து பக்தர்கள் 'கோவிந்தா', 'கோவிந்தா' என விண்ணதிர கோஷமிட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்து வருகிறார். ரத உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com