உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு
உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

உக்ரைன் நாட்டில் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் மருத்துவம் படித்துவந்த பஞ்சாபை சேர்ந்த சந்தால் ஜிண்டால் என்ற 22 வயது மருத்துவ மாணவர் திடீரென ஏற்பட்ட மூளை வாதத்தால் உயிரிழந்தார். ஏற்கெனவே கர்நாடகாவைச் சேர்ந்த 4ஆம் ஆண்டு மருத்துவ மாணவன் குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொரு இந்திய மாணவன் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தந்தை மற்றும் மாமா மாணவருடன் இருந்துள்ளனர். தற்போது அவர்களும் உக்ரைனில் சிக்கியுள்ளனர். ஏற்கனவே நேற்று உயிரிழந்த மாணவர் உடலை இந்தியா கொண்டு வர முடியாத நிலை உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com