\
”உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறுக” - இந்திய தூதரகம்

”உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறுக” - இந்திய தூதரகம்

”உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறுக” - இந்திய தூதரகம்
Published on

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில் மீட்புப்பணிகளுக்கான அவகாசம் அங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும்பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மனிதாபிமான அடிப்படையில் வெளியேற கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்தை உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com