இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற ஹங்கேரிய எழுத்தாளர்
2025ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரியன் எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கைக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பேரழிவுமிக்க பயங்கரமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் கலை எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்த்தக்கூடியவை லாஸ்லோவின் படைப்புகள் என்றும் அவருடைய வலுவான மற்றும் தொலைநோக்கு பார்வைகொண்ட எழுத்துகளுக்காக பரிசு வழங்கப்படுவதாகவும் நோபல் குழு குறிப்பிட்டுள்ளது.
சாட்டாண்டாங்கோ (Satantango), The Melancholy of Resistance, War and War ஆகிய இவரது நாவல்கள் பெரும் கவனம் பெற்றவை. இவரது இலக்கிய பங்களிப்புக்காக ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு சர்வதேச மேன் புக்கர் விருது வழங்கப்பட்டது. 71 வயதாகும் லாஸ்லோ, ஹங்கேரியில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய 30 வயது முதல் இலக்கியத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டுவருபவர். பல ஆண்டுகளாக நோபல் பரிசு பரிந்துரையில் அவரது பெயர் இடம்பெற்றுவந்துள்ள நிலையில் தற்போது அவருக்கு விருது கைகூடியுள்ளது.