அலையில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர்கள் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

அலையில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர்கள் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்
அலையில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர்கள் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

புதுச்சேரி கடலில் குளித்தபோது ராட்ச அலையில் இழுத்து செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களை உயிருடன் மீட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் விஷ்ணு (22), சபரிஷ் (24) ஆகியோர் தங்கள் நண்பர்களுடன் புதுச்சேரியில் நடைபெற்ற திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடற்கரையில் தங்கள் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது, ராட்ச ஆலை விஷ்னு, சபரிஷ் ஆகிய இருவரையும் இழுத்து சென்றுள்ளது இதைக் கண்ட அவர்களது நண்பர்கள் அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர் சவுந்தரராஜனை உதவி அழைத்தனர். இதையடுத்து அங்கு வந்த சவுந்தரராஜன் போலீஸ் சீருடையுடன் கடலில் குதித்து அலையில் இழுத்து செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களையும் உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சிகிச்சைகாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பெரிய கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இந்நிலையில், கடலில் மூழ்கிய இரண்டு இளைஞர்களை தனியொரு ஆளாக துரிதமாக செயல்பட்டு உயிருடன் காப்பற்றிய காவலர் சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com