எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்; இந்திய வீரர் உயிரிழப்பு

எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்; இந்திய வீரர் உயிரிழப்பு
எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தான்; இந்திய வீரர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் உயிரிழந்தார். 

ராஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 13ம் தேதி சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில் ரமலான் பண்டிகையின் போதும் அந்நாட்டு ராணுவத்தினர் அத்துமீறியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு மட்டும் இதுவரை இந்திய வீரர்கள் 11 பேர் பாகிஸ்தானின் அத்துமீறலால் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால் எல்லையில் இந்தியா பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே பதற்றமான சூழலே காணப்படுகிறது. ரம்ஜான் பண்டிகைக்காக எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் இனிப்பு பரிமாறும் நடைமுறையும் இம்முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com